கறுத்திருக்கும் வானம் .....
நான் செல்லுகின்ற பாதை எல்லாம்
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள்
என் நினைவுகள் போல...
மெலிதாய் வருடிச் செல்லும் காற்று ...
வலு பெற்றிருக்கும்
என் நெஞ்சின் உள்ளிருக்கும்
உன் நினைவுகளை
கண்கள் வழி வெளியேற்றுவதற்கு...
கன்னத்தில் உருண்டு ஓடும் ஒரு துளியில்
கரைக்க முயல்கிறேன்
உயிரில் உன்றிவிட்ட உன் நினைவுகளை
எடை கூடி இருக்கிறது
என் சுவாசக் காற்று
என் சுவாசமுமாய்
உன் நினைவுகள் இருப்பதால்....
விடிய விடிய சுழல்கிறது
என் அறை காற்றாடி மட்டும் அல்ல
என் ஞாபகங்களும்
உன்னைச் சுற்றியே !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thodakathil sila thadu matrangal ullathu...aanal nanraga mudithullaai...
Post a Comment