Monday, September 22, 2008

காதல்பக்கம் - நாம்

கண்களையும் கனவுகளையும்

உன்னால் நிறைத்திருக்கிறேன்......

கனவுகளின் உரையாடல்கள் விடியலுக்கு பிறகும்

காதுகளுக்குள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.....

உன் நினைவுகளுடனே தூங்கி போகிறேன்....

உன் நினைவுகளுடனே விழிக்கிறேன்....

இடைப்பட்ட நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என் காதல் ....

மௌனத்தை மொழி பெயர்க்க அறிந்திருந்தால்

என் காதலை காவியமாக்கி இருப்பேன் ......

முடியாமல் போனதால்

கவிதைகள் செய்து கொண்டிருக்கிறேன்....

உன் தோள்களில் நான் சாய்ந்து கொண்டிருப்பதாய்

என் விரல்களை நீ பற்றி கொண்டிருப்பதாய்

எண்ணிக் கொண்டு............

1 comment:

KARKE @ Karthikeyan said...

"NAAM"

"naam"la naa vuku kaal odinjalum athu "nam"nu porul perusaa maarama thaan irukkum... unnoda "naam" mum apadithaan... etho koranja maathiri iruku.. irundhalum nallave iruku... vidinthum kanuvugalodu uraiyadal.. nice...