தெருவின் நடுவிலே....
இயங்கி கொண்டிருக்கிறது உலகம் அதன் போக்கிலே....
இயங்க மறுக்கும் என் மனம்...
பிரளயமாய் புறப்பட்டு கரை தொட்டு அடங்கி போகும் அலையாய்....
அடிவயிற்றில் இருந்து புறப்பட்டு
தொண்டை குழியில் மறைந்து போகின்றன
விளங்காத உணர்வுகள்......
எங்கோ தூர தொலைவில் மறந்து விட்டு விட்டேன் என் சிரிப்பினை....
உள்நோக்கி பயணிக்கின்றன என் கண்ணீர் துளிகள்....
உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க முயன்று
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகின்றன என் வார்த்தைகள்...
அழுத்தமாய் விடுகின்ற மூச்சிலே கரைக்க முயல்கிறேன்
என் ஊமைக் காயங்களை காற்றோடு....
பாரம் ஏறிக் கொண்டிருக்கும் காற்று நாளை என் சுவாசத்தை நெருக்குமோ...
அச்சத்தைக் கொடுத்து கரைந்து செல்கிறது ....
இன்றைய இரவு....
ஈரம் உணர்ந்தேன் விழி ஓரத்திலே....
துவள்கின்ற சமயங்களிலே
என் தலை கோதும் விரல்களை
அழுத்தி பிடித்து கொள்கிறேன் கனவிலே......
1 comment:
hi.. all u r blog contends are very nice... i heard that you write poems.. all the above written by u . if so better mention u r writing name(nick name) ...
Post a Comment