Wednesday, September 24, 2008

தன்மானம்

அப்பாவுக்கு ஒரு மோதிரம்

அம்மாவுக்கு ஒரு புடவை

தம்பிக்கு அழகாய் ஒரு கைகடிகாரம்

இன்னும் நான் பார்க்காத என்னவருக்கு

அழகாய் ஒரு பரிசு

தெருக்கோடி புள்ளையாருக்கு ஒரு ரூபாய் காணிக்கை

பக்கத்து வீட்டில் பாத்திரம் கழுவும்

குட்டி பெண் மஞ்சுவுக்கு புது பாவாடை

அவள் விரும்பினால் ஒரு தமிழ் புத்தகம்....

பக்கத்து ஊரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு

ஒரு ஆயிரம் ரூபாய்

இவை அத்தனையும் செய்ய வேண்டும்

முதல் மாத சம்பளத்தில்!

இது ஆசை.

நனவாகி விடும்....

படிப்பு முடிந்த இரண்டாவது மாதத்தில்

இது நம்பிக்கை.

உலகப் பொருளாதாரத்தில் சரிவு

இது விதி.

இந்த தீபாவளிக்கு

ஒரு டிரஸ் கூடுதலாய் எடுக்க வேண்டும்....

அப்பா இருநூறு ரூபாய் சேர்த்து தருவாரா ?

இது நெறிஞ்சி முள்

தன்மானத்தில் !!!!!!!!!!!

3 comments:

Anonymous said...

nice da...ll comment on this n person...அருமை.....இதை பற்றிய எனது கருத்துக்களை உன்னிடத்தில் தனியே கூறுகிறேன்....

KARKE @ Karthikeyan said...

Thodu vaanathil oru thanmaanam

varumaanam illai...!! athanal varuthathil nam maanam.. SUPERB FEEL PAALS

Guruprasanna Achar said...

hai eash very nice feelings.

K who is that INNUM PARKADHA YEVANO ORUVAN