Wednesday, September 24, 2008

அவளின் முகவரி

அவிழாத மொட்டாய்

அழகான மலராய்

அழகாய் கழிந்து விட்ட ஆண்டுகள்...

அம்மாவின் மடியில் அடைக்கலமடைந்த பொழுதுகள்.....

அப்பாவின் கைகளுக்குள்ளே உலகத்தைக் கண்ட தருணங்கள்......

பூக்கும் பூவின் புத்துணர்ச்சியோடு

அற்புதமாய் விடிந்த கல்லூரி நாட்கள்....

பசுமையான நினைவுகள்....

மலர் இதழோரம் பனித்துளியாய் மனதின் ஓரம்

நீர் குடித்த பஞ்சாய்

மனதை நிறைத்த காதல் பாரம்

காதல் அல்ல....

கண்களின் விருப்பம்!

கனவுகளின் உச்சம்!

புதையுண்டது மனதுக்குள்

பூகம்பத்தில் புதைந்த சிற்பமாய்.....

அவர்கள் அறிமுகப்படுத்திய அவன்!

கண்களுக்கு புதிதாய்....

மனதிற்கு மிக புதிதாய் !

மஞ்சள் வேலியை ஏற்ற கணத்தில்...

விழியோரம் கசிந்த ஒரு துளியில்

கரைந்து போனது நேசித்த உறவு!

ம்ம்..............

உலகம் இயங்கத் தொடங்கியது அவனைச் சுற்றி!

அவன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி

சோகத்தை பகிர்ந்து

வெற்றியைக் கொண்டாடி

தோல்வியில் தோள் கொடுத்து

அவன் உணர்வுகளை தனதாக்கி.....

தன் உணர்வுகள் மறந்து

முகம் தொலைத்து

முகவரி இழந்த நேரத்தில்.....

உலகம் சற்றே விரிந்தது!

பிள்ளைகள் அறிமுகம்

இனி அவள் உலகம் இயங்கும்

அவர்களைச் சுற்றி !!!!!!!!!!!!!

1 comment:

KARKE @ Karthikeyan said...

"AVALIN MUGHAVARI"

NIRANDHARAM