Thursday, September 18, 2008

நினைவுகள்

தூரத்தில் கேட்கும் குயிலின் ஓசை
தினம் தோன்றுகின்ற சூரிய உதயம்
எங்கோ கசிகின்ற இசை
மழை நாட்கள்
நீண்ட பாதை
வட்ட நிலா
அசைந்து ஆடும் கொடி
தினசரி செய்திகள்
மின்விசிறி
யாவும் சுமந்து நிற்கும்
விட்டு வந்த இடத்தின் நினைவுகளை....
மனதின் எச்சங்களை....
காலத்தின் ஓட்டத்தை
எட்டி பிடிக்கிற வேகத்தில்
கடந்து விட்டவை.........
இறுதி வரை எஞ்சி இருக்கும்
நினைவுகளில்........





No comments: