Tuesday, December 8, 2009

என்னோடு நீ!

கை விட்டு நடந்து பார் என்றாய்...
நீள்கின்ற சாலைகளின் வழியே என் பயணம்
வளைவிற்கு பின்னால் இன்னும் நீ நிற்கிறாய் என்ற நம்பிக்கையில்....
உன் வார்த்தைகள் செவிப்பறைகளில் மோதி அழிந்துவிடவில்லை...
பிரபஞ்ச வெளியில் இன்னும் மிதக்கின்றன...
தினம் தினம் சூரியக் கதிர்கள் கோடிட்டு காட்டுகின்றன
என்னோடு நடக்கும் உன் காலடி சுவடுகளை....
எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது வானம்
அப்படித்தான் என்னோடு நீயும்!

--------------

"பிரிந்து செல்ல நண்பர்கள் உறவுகள் அல்ல.உணர்வுகள் " எங்கோ படித்ததாய் ஞாபகம்.
என் இனிய நட்புகளுக்காக இந்த கவிதை!

7 comments:

Mohan R said...

வளைவிற்கு பின்னால் இன்னும் நீ நிற்கிறாய் என்ற நம்பிக்கையில்....

எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது வானம்
அப்படித்தான் என்னோடு நீயும்!

Kalakureenga ponga Nice lines

Natpa pathi yengo padichadhum nalla irukku

ruby said...

எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது வானம்
அப்படித்தான் என்னோடு நீயும்!



superb di esh......

SASI said...

superb esh, excellent my dear friend.. keep it up ma......

Prabu M said...

//எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது வானம்
அப்படித்தான் என்னோடு நீயும்!//


இதுதான் இதே வரிதான் என்னையும் ரொம்ப சிலாகிக்க வெச்சது...

கருத்துரையில் பார்த்தால்... எங்கிருந்து பார்த்தாலும் இந்த தெரிகிறது இந்த வார்த்தைகளுக்கான ரசிகர் மன்றம்!!

முதலில் உங்கள் ப்ளாக் பார்த்தவுடனேயே படித்தது "நலம்" கவிதைதான்..... எளிமையான வார்த்தைகள்... எளிமையான உணர்வுகளும் கூட.... ஆனால் ஆழமாகப் புரிந்தது.... ரொம்ப பிடிச்சிருந்தது....

Paleo God said...

நீள்கின்ற சாலைகளின் வழியே என் பயணம்
வளைவிற்கு பின்னால் இன்னும் நீ நிற்கிறாய் என்ற நம்பிக்கையில்....

super...

ரிஷபன் said...

நட்பு என்கிற உணர்வு ஜீவித்திருக்கும்வரை வாழ்க்கையின் மீது தானாக காதல் வரும் நல்லா இருக்கு

kavya said...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி