Friday, October 14, 2011

விரும்பினும் விரும்பாவிடினும். . .

வெறித்துப் பார்க்கிற ஜன்னல் வழி
கசிந்தே கரைகிறது பொழுது. .
தனியாய் சாலை கடக்கயிலே
தெரிந்த குரல் விளிப்பதாய் நினைவு. . .
பள்ளிக்கால தோழி ஒருத்தி தொலைபேசியில் அழைப்பதாய்
மறந்து போன பழங்கதைகள் சில பேசுவதாய்
அடிக்கடி வருகிறது குழம்பிய கனவு. .
முகம் பார்க்காத உரையாடல்களின் வழி
உயிர் பிழைக்கின்றன உறவுகள். .
தீராத தேடலில் தொலைவது யாதாயினும்
தொடர்ந்தே நகர்கிறது வாழ்க்கை
விரும்பினும் விரும்பாவிடினும். . .

3 comments:

aotspr said...

அருமையான கவிதை......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Prabu said...

Hello...
Blogging after a very long time!
nice...

romba yathaarthamaana kavithai....
thodarnthu ezhuthunga... :)

kavya said...

Thanks kannan. .
Thanks so much prabhu for following