Sunday, April 5, 2009

இன்னும் நீ !

என் ஜன்னல் வழியே
பெய்து முடித்து விட்ட மழை நீ!
என் கால் நனைத்து
போய் விட்ட அலை நீ !
ஏதோ ஒரு கோடையில்
கன்னம் வருடி போய் விட்ட தென்றல் நீ!
விரித்து விட்ட சிறகுகளில்
வெவ்வேறு வண்ணங்கள் !
கேட்கும் பாடல் வரிகளுக்கு
புதுப் புது அர்த்தங்களை
நான் கற்பித்துக் கொண்டாலும்
அடி நாதத்தின் ஒரு இழையில் இன்னும் நீ !!!!!

6 comments:

Anonymous said...

ithu sogamana nadaiyil eluthirkiya???Is it so???

SASI said...
This comment has been removed by the author.
SASI said...

உன் இமைகளை தாண்டி வழிவது கண்ணீர் அல்ல கவிதைகள் என்று நினைக்கின்றேன்...
நீ கதறி அழுதால் அழுகிறாய் என்றே எழுதலாம் உன் அழுகையை எழுத முடியாது உணர்வுகளின் வெளிப்பாடே உனது கவிதைகள்........
உன் கற்பனை திறனும் கவிதைகளும் மெம்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....
என்னை என்றும் மறவாதே என் தோழியே(ஈஸ்வரியே) உன்னை என்றும் மறவாத உன் நண்பன்..... "சசி".....

புலவன் புலிகேசி said...

அழகுக் கவிதை

kavya said...

நன்றி புலிகேசி

ரிஷபன் said...

அடி நாதத்தின் ஒரு இழையில் இன்னும் நீ
தொலைந்து போகாத கவிதை மனசு!