Wednesday, September 24, 2008

மெல்ல மனிதம் இனி சாகும்

வானின் சாயல் பூமியில் தேடி ஓர் பயணம் போல
மனிதத்திற்கான தேடல்!
ஒரு வெற்றிக்காய் !
ஒரு முகவரிக்காய்!
உணர்வுகள் தொலைத்தோம்.....
சிரிப்பு மறந்து
அழுகை மறந்து விஞ்ஞானம் கற்றோம்!
தூக்கம் விழித்த இரவுகள்...
பரபரப்பில் கழிந்த பொழுதுகள்....
இவை சொல்லும் எங்கள் மனம் செல்லும் வேகம் !
அந்த வேகத்தில் தொலைந்து விட்ட
மெல்லிய உணர்வுகள் ......
உணர்வுகள் தொலைத்ததை அறியாமலேயே
அடுத்த நிலைக்கான பயணம் !
இன்னும் அதிகப்படியான வேகம்!
நல்ல தோழமையின் தோள்களில் சாய்ந்து கொள்ள
உறவுகளின் மடி சாய.....
நேசம் உணர....
அற்புதங்கள் ரசிக்க....
நேரமின்றி அவசரத்தின் அவஸ்தைகள்
மெல்லத் தமிழ் இனி சாகும்...
கவிஒருவனின் குரல்....
தமிழ் மீதிருந்த காதலால் ...
இன்று இருந்திருந்தால் எழுதி இருப்பான்....
"மெல்ல மனிதம் இனி சாகும்"

2 comments:

KARKE @ Karthikeyan said...

"MELLA MANITHAM INI SAAGUM"

manithathirku ne kattiya TAJ MAHAL... Aanal ithu ulaga adhisayam alla... ULAGHA AVALAM..

Mohan R said...

"மெல்ல மனிதம் இனி சாகும்"

TRUE